கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை அருகே அறுவடை நகர் பகுதியில் தங்க நகை பட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இன்று மதியம் ஆலையில் இருக்கும் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.