அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்னலட்சுமி கடாரம் கொண்டானில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் பெரியவளையம் அய்யனார் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அன்னலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.