கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக எரி சாராயம் கடத்தி வந்து போலீஸ் மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் போலியான மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கேரளாவை சேர்ந்த சந்தோஷ் குமார், அருண் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் எரி சாராயம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.