கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் தினமும் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அந்த சாலையில் இருக்கும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே அந்த பகுதி மக்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. தற்போது விடுமுறை என்பதால் அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும். ஆனால் மரம் விழுந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.