வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் மேம்பாலத்தில் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காரின் முன் பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விட்டது. மேலும் விபத்துக்குள்ளான கார் சாலையில் வந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்தார்கள், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் என் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.