காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் பிரபாகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாகரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.