திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் அஜிஸ் அகமதி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும், நேபாளத்தைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்பவரும் வேலைக்கு சேர்ந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜாவும் ரோகித் சர்மாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

அதன் பிறகு நேற்று  காலை ராஜா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராஜாவை பளு தூக்கும் கருவியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.