தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் சின்ன நசவுக்கார தெருவில் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவாஸ் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பவாஸ் தனது நண்பருடன் நாகூர் கந்தூரி விழாவிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது நண்பரை வீட்டில் விட்டுவிட்டு ஐடிஐ திடல் எதிரே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பவாஸ் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த பவாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.