கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அந்த இளம் பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் சமையல் தொழிலாளியான அகமது(25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இதனையடுத்த புதிதாக செல்போன் வாங்கிய சமையல் தொழிலாளி இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும்போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலாளி வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாகவும், கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவேன் எனக் கூறியும் இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் இளம்பெண் அச்சத்தில் அகமதுவுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தார். அதன் பிறகும் அவர் தொடர்ந்து தொந்தரவு அளித்ததால் இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அகமதை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.