செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலமையூர் பாரதியார் தெருவில் கொத்தனாரான சன்னியாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(22) தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டு பின்பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்பிய கார்த்திக் கை, கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின் வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி கார்த்திக் தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.