கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ராமசாமி என்பது தெரியவந்தது.

அவர் கடைகளுக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதனால் போலீசார் ராமசாமியை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த 2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.