ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர் தோட்டம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மோகன், தர்மன், ஐயா சாமி அய்யாதுரை விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.