கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பில்லாடி அக்காரம் பகுதியில் ஏழுமலை(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த ஏழுமலையை பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவர்  தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.