ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உப்பரந்தாங்கல் கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பத் அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவரது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்கான மின்சார சுவிட்சை கழற்றிய போது எதிர்பாராதவாதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.