கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி. பாளையம் கிராமத்தில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு சண்டை போட்டுக் கொண்டிருந்த தமிழரசன் மணிவேல் ஆகிய இருவரையும் சுரேஷ் சமாதானப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமிழரசன் குடிபோதையில் சுரேஷின் வீட்டிற்கு சென்று நீ மணிவேலுக்கு தான் ஆதரவாக பேசினாய் என கூறி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.