தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வடக்குரத வீதியில் அப்துல் சலீம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பர் முகமது பாசித்(47). முகமது பாசித் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தொழிலை விரிவு படுத்துவதற்காக முகமது அப்துலிடம் 10 லட்சம் ரூபாய் கடனாக கேட்டார்.

அதற்கு அப்துல் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி முகமது பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து அப்துல் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முகமது பாசீத்தை கைது செய்தனர்.