சென்னையில் இருந்து கோவைக்கும், மைசூருக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை, மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் காலை 5.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்தே பாரத் ரயில் பேசின் பிரிட்ஜ் பனிமலையிலிருந்து சென்ட்ரலுக்கு கொண்டுவரப்பட்டபோது மர்ம நபர்கள் சி-5, சி-7 ஆகிய பெட்டிகளின் கண்ணாடிகள் மீது கல் வீசி தாக்கினர். இதனால் இரண்டு கண்ணாடிகள் உடைந்தது.

இதனையடுத்து பயணிகள் ரயிலில் எறிய போது கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரயிலின் கண்ணாடிகள் மாற்றப்பட்டு மீண்டும் பயணிகள் சேவைக்கு இயக்கப்பட்டது. ரயில் மீது கற்களை எறிந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.