சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து சூர்யா வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு 100 சாலையில் வந்த தங்கசாலை செல்லும் மாநகர பேருந்தில் ஏற முயன்றார். இதனையடுத்து ஓடும் பேருந்தின் முன்புற படிக்கட்டு வழியாக ஏற முயன்ற போது கால் தவறி சூர்யா கீழே விழுந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் பின்பக்க சக்கரம் சூர்யாவின் இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த சூர்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.