சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஜான்சி ராணி(45) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அபினேஷ்(18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் அபினேஷ் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், அனுசம்பிகா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றர். நேற்று முன்தினம் பொன்னுதாசும், ஜான்சி ராணியும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பொன்னுதாஸ் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை கொடுக்க முடியாமல் பொன்னுதாஸ் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் கடனை திருப்பி கேட்டு உறவினர்களும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். தாய், தந்தையை இழந்து மகனும் மகளும் பரிதவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.