ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் திம்பம் மலைப்பாதை ஆசனூர் சாலையில் உலா வருவது வழக்கம். நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி ஒரு காரில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். ]

இந்நிலையில் செம்மண்திட்டு என்ற இடத்தில் சென்ற போது சாலையோரம் சிறுத்தை படுத்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து காரின் வெளிச்சத்தை பார்த்ததும் சிறுத்தை ரோட்டை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.