நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  வருவாய்த்துறை, மருத்துவ காப்பீடு திட்டம், சமூக பாதுகாப்பு திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை, வேளாண்மை துறை, தொழிலாளர் துறை, பட்டு வளர்ப்பு துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஒளிட்டரை சார்பாக 260 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும் பல்வேறு துறைகள் சார்பாக பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாமில் அரசு துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.