நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சி கூத்தங்குடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். மேலும் மாநில விவசாயிகள், ஆலோசனை குழு உறுப்பினர் மகா குமார், விவசாயிகள் சங்கத் தலைவர் வேணு காளிதாசன், ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராஜேந்திரன், விவசாய சங்க செயலாளர் பிரபு உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதனால்  விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.