திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது மத்திய அரசு அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஒன்றிய தலைவர் வெங்கடேசன், மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் சரவணன், மாவட்ட பொதுச் செயலாளர் அன்புமணி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் அனைவரும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியுள்ளனர்.