திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பெருமாள்குளம் பகுதியில் விவசாயியான ரவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடைய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் மேலே சென்ற இரண்டு மின்சார ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியது. அப்போது ஏற்பட்ட தீப்பொறிகள் கரும்பு தோட்டத்தில் விழுந்து தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

மேலும் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இதுகுறித்து அறிந்த ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.