கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிச் சீருடையில் இருந்த இரு மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே மது அருந்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த இந்தச் சம்பவத்தை சக மாணவர்கள் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த ஆதார வீடியோவுடன், பள்ளி தலைமை ஆசிரியை பிரமிலா எவாஞ்சலினிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற தலைமை ஆசிரியை, சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தினார்.

ஆனால், பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கவும், தன் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்வதிலிருந்து தப்பிக்கவும், அந்தச் சம்பவம் வீட்டில்தான் நடந்தது என்று மாணவிகளிடமிருந்து கட்டாயப்படுத்தி எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து, இச்சம்பவம் குறித்து நேரடி விசாரணை நடத்தக் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை மின்னியல்/கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

“>

மேலும், தவறான சம்பவத்தை மறைக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.