புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அண்ணா நகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராதா கிருஷ்ணன் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி தனது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு மகனுடன் வெளியே சென்று விட்டார்.

நீண்ட நேரமாகியும் ராஜலட்சுமி  வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.