சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் செல்லியம்பாளையம் முனியப்பன் கோவில், நரசிங்கபுரம் பகுதிகளில் 1/2 லிட்டர் அளவு கொண்ட குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சதீஷ் என்பவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் 60 பிளாஸ்டிக் பாட்டில்களில் சாராயம் அடைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.