சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் இப்பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழ வகைகள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி உள்ளிட்ட பழ வகைகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ரவிச்சந்திரனின் கடையிலிருந்து புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.