திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகள், தெருகள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் கனமழை வெள்ளத்தால் கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வெள்ளத்தில் விழுந்தது. இதனை பார்த்ததும் பெண் ஒருவர் எல்லாம் போச்சே என்று கூறி கதறுவது அனைவரையும் கண்கலங்க செய்கிறது.