தேனி மாவட்டத்தில் உள்ள கீழ பூசனூத்து பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக வினோத்குமாரின் மண் வீடு திடீரென இடிந்து விழுந்தது.

இதற்கிடையே வினோத்குமார் தனது கர்ப்பிணி மனைவி, மகளை மீட்டு வெளியே கொண்டு வந்தார். ஆனால் மீனாவுக்கும் அவரது மகளுக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.