விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமூர் மாரியம்மன் கோவிலில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.