கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடித்தவன் அடையாளம் தெரிந்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவன் கொள்ளை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் கொள்ளையில் ஈடுபட்டான் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற நபரின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரின்  அடையாளத்தை போலீசார் உறுதி செய்துள்ளனர். கொள்ளையடித்த நபரின் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பதும் உறுதியாகியுள்ளது. அதேபோல கொள்ளையடித்த நபரை பிடிக்க தனிப்படை விரைந்துள்ள நிலையில், அவர் கோவை ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடை ஊழியரிடம் இன்று காலை விசாரணையானது நடைபெற்றது. காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் மர்ம நபர் ஒருவர் ஏசி வெண்டிலேட்டர் வழியாக சென்று 200 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், 5 தனிப்படை அமைத்து கொள்ளை அடித்த நபரை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையடித்த நபர் ஆட்டோவில் நகைகளுடன் சென்ற காட்சிகளும் வெளியானது. இந்த நிலையில் அவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.