புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கந்தர்வகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மற்றும் தஞ்சைக்கு செல்ல பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக பேருந்து வசதி வேண்டுமென்றும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி கந்தர்வகோட்டையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மாணவர்களும் மக்களும் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.