புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை மீட்டனர். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த குமரேசன் மற்றும் சங்கீதா தம்பதியினர் தங்கள் குழந்தையை காணவில்லை என தேடியது தெரியவந்தது. குமரேசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் வேறொருவரின் மனைவியான சங்கீதாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

29 நாட்களுக்கு முன்பாக சங்கீதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரவு சங்கீதா மற்றும் அவருடைய கணவர் குடிபோதையில் இருந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குமரேசன் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என சங்கீதாவை திட்டியுள்ளதால் அதிகாலை 3.30 மணி அளவில் கடற்கரை மணலில் சங்கீதா பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்துள்ளார். குழந்தையை மேலோட்டமாக புதைத்ததால் நாய் மணலில் இருந்து இழுத்து வெளியே போட்டுள்ளது என சங்கீதா கூறியுள்ளார். மேலும் பிறந்து 29 மாதம் ஆன குழந்தையை குடிபோதையில் பெற்ற தாயை உயிரோடு புதைத்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.