மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மழை பெய்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி –  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம்  புயல் பாதிப்பு காரணமாக தமிழ்நாடு அரசு விடுமுறையை அறிவித்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம்  புயல் காரணமாக அதீத மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது மற்றும் பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது.

இதனால் அந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் படகுகள் மூலமாக அவர்களை மீட்கும் பணியில் தொடர்ச்சியாக அதிகாரிகள் ஒரு புறம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.   ஏற்கனவே மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை இந்த நான்கு மாவட்டங்களிலும் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.