தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் கனமழை பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தில் சென்னை மிதப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.