தமிழகத்தில் புயல் மற்றும் கனமழை பாதிப்பு எதிரொலியாக சென்னையை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னைக்கு இணையாக திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அந்த மாவட்டம் முழுவதும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.