அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஊடக பெருமக்களை பார்த்தாலே  பயமாக இருக்கு. ஒவ்வொருத்தரும் இல்லாத பொள்ளத்தை சொல்லுறாங்க.. டேய்..! 41 ஆண்டுகள் சொக்க தங்கமாக இருந்தவன் இந்த செல்லூர் ராஜு. மதுரைக்காரன், ரோசக்காரன். ஒரு தவறு செய்ய மாட்டான்.  இந்த செல்லூர் ராஜு தப்பு பண்ணா…  என்னோட மட்டுமல்ல…. என் குடும்பம் மட்டுமல்ல…

என் சமுதாயமட்டும் அல்ல.. மதுரை மக்களுக்கே  கேவலமென்று நினைத்தவன் நான். எவனோ ஒருத்தன் சொன்னான்னு… அதை போய் போட்டு… அதையும்  ரெண்டு கோடி பேர் பார்த்தாங்க. நம் மக்களினுடைய உணர்வு எப்படி இருக்கு பாருங்க ?  என்னை இன்னும் தெர்மாகோல் என சொல்லி  ஓட்டுறாங்க… ஓட்டுறாங்க… ஓட்டுறாங்க… ஓட்டிகிட்டே இருக்காங்கப்பா… என்னைக்கு  தான் முடியும்னு தெரிலையே…

நான் எங்கப்பா போவ. நான்  வைகை ஆற்றுக்காக போய்…. திருவிழா வருது… என் மதுரைக்கு 15 லட்சம் மக்கள் வருவாங்களே…  இருக்கிறதே 15 அடி,  20 அடி தான்.அதை காப்பாத்தணுமே…  அதிகாரிகள் சொல்றாங்களேன்னு  போய் செஞ்சா, புடிச்சுட்டாங்க. அன்னையிலிருந்து இன்னைக்கு துரைமுருகன் கூட விட மாட்டேங்குறாரு என தெரிவித்தார்