அண்ணாமலை பாத யாத்திரை, வசூலுக்காக மட்டுமே நடப்பதாக கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர், ஆளும் கட்சியையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்துவருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் எம்.பி ஜோதிமணி, “அண்ணாமலையின் வசூல் யாத்திரை மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. 100 மீட்டர் நடப்பதெல்லாம் ஒரு யாத்திரையா?, மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது” என தெரிவித்துள்ளார்.