தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதனிடையே, இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.