தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கக்கன்ஜிபுரம் கிராமத்தில் கட்டிட மேஸ்திரியானா முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளிக்கூடத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த திவ்யதர்ஷினி நேற்று முன்தினம் மாடியில் துணிகளை காய போடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி திவ்யதர்ஷினி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் திவ்யதர்ஷினியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.