விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.