தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து கார் டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் இசக்கி முத்துவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இசக்கிமுத்து இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இசக்கிமுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.