திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழ் முதலம்பேடு கிராமத்தில் யுகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி யுகேந்திரன் தனது நண்பர்களான ராஜசேகர், டேவிட் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் புது ரோடு சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலையில் சென்றபோது தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று யுகேந்திரன் பரிதாபமாக இருந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.