திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போஸ்கோ நகரில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் அனுமந்த உபவாச நகரில் இயங்கி வரும் 24 மணி நேரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது டாக்டர் தியாகராஜன் இளம்பெண்ணிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து இளம்பெண் உடனடியாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த இளம் பெண்ணின் பெற்றோரும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் மருத்துவமனைக்கு சென்று கற்களை வீசி தாக்கி ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தியாகராஜரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் சுரேந்தர், கோகுல், நரேஷ், ராகுல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.