திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜேசுதாசன் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக லாசர் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் பேட்டை-சேரன்மகாதேவி ரோடு பேட்டை காவல் நிலையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தபால் அலுவலகத்தின் முன்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.