தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வல்லரசு என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளை மீறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை வல்லரசு திருமணம் செய்து கொண்டார். இதற்கு வல்லரசுவின் நண்பர் கார்த்திகேயன்(23) உதவியதாக தெரிகிறது.

இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் கார்த்திகேயனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் காயமடைந்த கார்த்திகேயன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.