திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி என்று செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு மேற்கொண்ட சோதனையில் 18 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 4 சிறப்பு குழுக்கள் மேற்கொண்டு அதிரடி ஆய்வில் தாராபுரம், அவிநாசி, பல்லடம் மற்றும் காங்கேயம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 18 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.