பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாளந்துரை கிராமத்தில் ஜெயக்குமார்-தமிழ்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தமிழ்மணி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தமிழ்மணி பெரங்கியத்தில் உள்ள தோழி வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு அங்கிருந்து தனது தாய் ஊரான வாகையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகவரி கேட்பது போல நடித்து தமிழ்மணியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார். இதுகுறித்து தமிழ்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.