கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் தாய்க்கும் தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே மாணவியின் தாய்க்கு வேட்டைக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில் பள்ளி விடுமுறை தினத்தில் வீட்டில் இருந்த சிறுமியிடம் சுரேஷ் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால் சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.